ஃபுங்-வாங் புயல் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள்... ஏபி
உலகம்

ஃபுங் - வாங் புயல்! தைவானில் 8,300 பேர் வெளியேற்றம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்!

தைவானில் ஃபுங் - வாங் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,300-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

தைவான் நாட்டில், ஃபுங் - வாங் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் 8,300-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தெற்கு சீன கடலில் உருவாகியுள்ள ஃபுங் - வாங் புயல், கடந்த நவ.9 ஆம் தேதி சக்தி வாய்ந்த புயலாக பிலிப்பின்ஸ் நாட்டில் கரையைக் கடந்தது.

இந்தப் புயலால், அந்நாட்டில் கடும் கனமழை பெய்து, முக்கிய நகரங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பிலிப்பின்ஸில் 27 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தைவானின் நிலப்பரப்பில் இருந்து 140 கி.மீ. தூரத்தில் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் ஃபுங் - வாங் புயல், தென்மேற்கு தைவானில் இன்று (நவ. 12) மாலை அல்லது நாளை அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஏற்கெனவே, தைவானின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஏராளமான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தைவானின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 8,326 பேர் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பிலிப்பின்ஸ் நாட்டில் ஃபுங் - வாங் புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதில், இன்று காலை நிலவரப்படி சுமார் 6,23,000-க்கும் அதிகமான மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கிய துருக்கி ராணுவ சரக்கு விமானம்! 20 வீரர்கள் பலி!

In Taiwan, more than 8,300 people have been evacuated from coastal and mountainous areas as a precaution against Typhoon Fung-Wang.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

குடியிருப்புக்குள் உலா வந்த காட்டு யானை! மக்கள் அச்சம்!

பி என் காட்கில் ஜுவல்லர்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

SCROLL FOR NEXT