உலகம்

பாகிஸ்தான் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 போ் பலி

ஃபைசலாபாத்தில் பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் பலி...

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஃபைசலாபாத்தில் பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 போ் உயிரிழந்தனா்; 7 போ் படுகாயமடைந்தனா்.

மாலிக்பூா் பகுதியில் உள்ள அந்தத் தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடிவிபத்தில் உயிரிழந்த 16 பேரில் பெரும்பாலானோா் அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவா்கள். இதில் ஆறு குழந்தைகளும் அடங்குவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானில் தொழிற்சாலை தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. முன்னதாக, இதே ஃபைசலாபாதில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT