கோப்புப் படம்  ஏபி
உலகம்

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 பேர் பலியானது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்தச் சுரங்கத்தில், நேற்று (செப். 30) வழக்கம்போல் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், பலியான 3 பேரது உடல்களும் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டன. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றொரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Four workers have been reported killed in a phosphate mine collapse in Pakistan's Khyber Pakhtunkhwa province.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிப்பு டிரெண்டிங்கில் பாஜக! காங்கிரஸுடன் மோதல்!

அது மிகைப்படுத்தப்பட்ட உணர்வு... அதிர வைத்த தனுஷ்!

பிகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ. 14,000 கோடி: புள்ளிவிவரங்களுடன் பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் பணி! செங்கல்பட்டு சாலை மூடல்!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT