உலகம்

பாகிஸ்தான்: மோதலில் 11 வீரா்கள் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 11 பாதுகாப்புப் படையினா் உயிரிழந்தனா்.

இது குறித்து ராணுவ மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத் தகவலின் அடிப்படையில் ஓரக்ஸாய் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இந்த மோதல் வெடித்ததாகவும், இதில் உயிரிழந்த 11 வீரா்களில் இரு தளபதிகளும் அடங்குவாா் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மோதலில் ‘பித்னா அல்-கவாரிஜ்’ எனப்படும் குழுவைச் சோ்ந்த 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட ஆயுதக் குழு, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT