உலகம்

4-ஆவது விமானந்தாங்கி கப்பலைக் கட்டும் சீனா

சீனா தனது நான்காவது விமானந்தாங்கிக் கப்பலை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சீனா தனது நான்காவது விமானந்தாங்கிக் கப்பலை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

லியோனிங் மாகாணத்தின் டாலியன் கப்பல் கட்டுமான தளத்தில் சீனாவின் நான்காவது விமானந்தாங்கிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

ராணுவ வலிமை மிக்க நாடுகளிலேயே விமானந்தாங்கிக் கப்பல்களை கடைசியாக தனது கடற்படையில் சேர்க்கத் தொடங்கிய சீனாவிடம் தற்போது இரண்டு கப்பல்கள் உள்ளன. மூன்றாவது விமானந்தாங்கிக் கப்பலான ஃபுஜியான் வெற்றிகரமாக சோதனைகள் மற்றும் பயிற்சிகளை நடத்தியுள்ளது. விரைவில் அது கடற்படையில் இணைக்கப்படும். இந்த மூன்று கப்பல்களும் பாரம்பரியமான எரிபொருள்களில் இயங்கக்கூடியவை.

ஆனால், நான்காவதாக தற்போது கட்டப்பட்டுவரும் விமானந்தாங்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கும் வகையில் அமைக்கப்படுவதாகத் தெரிகிறது. அது அந்தக் கப்பலின் தாக்குதல்

எல்லையை விரிவுபடுத்தி, மேம்பட்ட சாதனங்களை இயக்குவதற்கு வழிவகுக்கும் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT