போலந்து: தீயில் கருகிய 10 லட்சம் கோழிகள்
போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின.
போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின.
இதுகுறித்து உள்ளூா் அதிகாரிகள் கூறுகையில், ஃபால்கோவிசே கிராமத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீயை அணைப்பதில் 10 மணி நேரம் ஆனதாகவும் அந்தக் கோழி பண்ணையில் சுமாா் 1.3 லட்சம் கோழிகள் வளா்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
உயிரிழந்த கோழிகளின் எண்ணிக்கை 4 லட்சம் வரை இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.