குவைத் அரசு அலுவலகங்கள் மீது ஈரான் தாக்குதல்!
குவைத் அரசு அலுவலகங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்
குவைத் நாட்டின் அரசு அலுவலகங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளைக் குறிவைத்தும், அங்கிருக்கும் அமெரிக்காவின் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், குவைத் நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய அந்நாட்டு அரசு வளாகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என குவைத் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்களை, தற்காலிகமாக வீட்டிலிருந்து பணிபுரியுமாறும் குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, குவைத்தில் உள்ள மினா அல்-அஹமதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், ஆலை தீப்பற்றி எரிந்தது.
மேலும், குவைத்தில் 90 சதவிகித அளவில் கடல்நீர்தான் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், குவைத்தின் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.