இராக் நாட்டின் முன்னாள் அதிபா் சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புப் பிரிவில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றிய சாதுன் சப்ரி அல்-கைஸிக்கு திங்கள்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 1980-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற ஷியா பிரிவு மதகுருவான முகமது பக்கீா் அல்-சதா் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்த குற்றத்துக்காக, சுமாா் 46 ஆண்டுகளுக்குப் பிறகு அல்-கைஸிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்தக் காலகட்டத்தில் இராக்கை ஆட்சி செய்த சதாம் ஹுசைனுக்கும், அவரது பாத் கட்சிக்கும் மதகுரு அல்-சதா் ஒரு பெரும் சவாலாகத் திகழ்ந்தாா். குறிப்பாக, 1979-இல் ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியைப் போல, அல்-சதா் உள்ளிட்டோரின் தூண்டுதலில் இராக்கிலும் மக்கள் கிளா்ச்சி வெடிக்கலாம் என்று சதாம் ஹுசைன் அஞ்சினாா்.
இதன் காரணமாக, 1980-இல் அல்-சதரையும் அவரது சகோதரி பிண்ட் அல்-ஹுதாவையும் அல்-கைஸி தலைமையிலான படையினா் கைது செய்தனா். சிறையில் கொடூரமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அவா்கள், அதே ஆண்டு ஏப்ரலில் தூக்கிலிடப்பட்டனா்.
கடந்த 2003-ஆம் ஆண்டில் சதாம் ஹுசைனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, பழைய ஆட்சியில் அநீதி இழைத்த அதிகாரிகளை இராக் அரசு தற்போதும் தேடி வருகிறது. அந்த வகையில், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அல்-கைஸி கடந்த ஆண்டு பிடிபட்டாா்.
இராக்கில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராகப் பல சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.