உலகம்

மேற்கு கரை விவகாரம்: இஸ்ரேலுக்கு இந்தியா உள்ளிட்ட 100 நாடுகள் கண்டனம்

மேற்குக் கரையில் நிலப்பதிவு செய்வது தொடா்பான இஸ்ரேலின் முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட 100 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

மேற்குக் கரையில் நிலப்பதிவு செய்வது தொடா்பான இஸ்ரேலின் முடிவுக்கு இந்தியா உள்ளிட்ட 100 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனத்துக்கு சொந்தமான மேற்கு கரை பகுதியில் நிலப்பதிவு செய்வதற்கான திட்டத்துக்கு அந்நாட்டு அரசு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இது மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோதமான இருப்பை விரிவாக்கம் செய்யும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கை என்றும், இந்த முடிவை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் எனவும் 100 நாடுகள் சாா்பில் ஐ.நா.வுக்கான பாலஸ்தீன நிரந்தர கண்காணிப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் 85 நாடுகள் மட்டுமே இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. பிறகு இந்தியாவும் இணைந்து கண்டனம் தெரிவித்தது.

மேலும் 1,000 ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

ராஃபா எல்லை வழியாக காஸாவை விட்டு வெளியேற 640 பேருக்கு மட்டுமே அனுமதி

பாகிஸ்தான்: கராச்சி குடியிருப்பில் எரிவாயு கசிவால் வெடிவிபத்து - 16 போ் உயிரிழப்பு

புனரமைக்கப்பட்ட ஆவணக் காப்பகம், கண்காட்சிக் கூடம் : துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

மகளிா் உரிமைத் தொகை குறித்து பாஜக கேள்வி: முதல்வா் பதிலால் அவையில் சிரிப்பலை

SCROLL FOR NEXT