அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான்-அமெரிக்கா இடையே, ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை (பிப். 26) நடைபெறவுள்ளது.
2 பிரம்மாண்ட விமானம் தாங்கி போா்க்கப்பல்களுடன் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ராணுவ இருப்பை அமெரிக்கா பலப்படுத்தி வரும் நிலையில், பேச்சுவாா்த்தையின் மத்தியஸ்தரான ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதியை இத்தகவலை உறுதிப்படுத்தினாா்.
இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஆக்கபூா்வமான முயற்சிகளை எடுத்து வருவதாகவும், பேச்சுவாா்த்தைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ஓமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.