யேமனின் தீவில் சிக்கிய இந்தியப் பெண் மீட்பு! சௌதியில் இருந்து தாயகம் வந்தடைந்தார்!
யேமன் நாட்டின் தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர் மீட்கப்பட்டது குறித்து...
யேமன் நாட்டின் தீவில், கடந்த சில வாரங்களாகச் சிக்கியிருந்த இந்தியப் பெண் ஒருவர் மீட்கப்பட்டு சௌதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனின் சோகோத்ரா தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ஒருவர் புதன்கிழமை (ஜன. 7) காலை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு சௌதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, யேமனின் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
Advertisement
Advertisement
“கடந்த சில வாரங்களாக யேமனின் சோகோத்ரா தீவில் சிக்கிய ராக்கி கிஷன் கோபால் என்ற இந்தியப் பெண், சிறப்பு யேமனியா விமானம் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு ஜெட்டா நகரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ராக்கி கிஷன் பத்திரமாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் இன்று காலை இந்தியாவுக்குத் திரும்பியதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் யேமன் நாட்டுக்குச் சென்ற காரணம் மற்றும் தீவில் சிக்கிய விவரங்கள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
முன்னதாக, யேமனின் ஹவுதி உள்ளிட்ட உள்நாட்டு ஆயுதக்குழுக்களுக்கு இடையில் கடந்த சில நாள்களாகக் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
An Indian woman stranded on an island in Yemen has been rescued and taken to Saudi Arabia, it has been reported.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.