காஸா விஷயத்தில் பாகிஸ்தான் தேவையில்லை: இஸ்ரேல் கறார்
காஸா மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கேற்பை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காஸா மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கேற்பை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காஸாவை கைப்பற்றுவதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இதற்காக சர்வதேச நிலைப்படுத்தல் படையையும் அமெரிக்கா உருவாக்கி வருகிறது. இந்தப் படையில் சேருவதற்காக பாகிஸ்தான் உள்பட பல நாடுகளை அமெரிக்கா கோரியுள்ளது.
ஆனால், காஸாவுக்கான எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, இஸ்ரேல் தூதர் ரூவென் அஸார் பேசுகையில், "நாம் முன்னேறக்கூடிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கு ஹமாஸ் அகற்றப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஹமாஸுடன் சண்டையிட விரும்பவில்லை என்பதால், ஏற்கெனவே பல நாடுகளும் அவர்களின் படைகளை அனுப்பவில்லை. இதனால், தற்போதைய சூழ்நிலையில் நிலைப்படுத்தல் படை என்ற யோசனை அர்த்தமற்றதாகி விட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், இந்தப் படையில் பாகிஸ்தானின் பங்கை இஸ்ரேல் ஏற்றுக் கொள்கிறதா? என்ற கேள்விக்கு - ’இல்லை’ என்றே அஸார் பதிலளித்தார்.
நம்ப இயலாதவர்களுடனும், முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டவர்களுடனும் மட்டுமே ஒத்துழைக்கின்றன" என்று அஸார் கூறினார்.
Israeli Ambassador Addresses Pakistan's Potential Role in Gaza Stabilisation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.