ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! - உறுதிசெய்த ஐஏஇஏ
ஈரானில் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையம் மீதும் தாக்குதல்..!
உலகம்ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! - உறுதிசெய்த ஐஏஇஏ
ஈரானில் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையம் மீதும் தாக்குதல்..!
ஈரானில் முக்கிய அணு எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ‘நடான்ஸ்’ அணுசக்தி மையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) உறுதிசெய்தது.
முன்னதாக, ஈரானின் எந்தவொரு அணு சக்தி உள்கட்டமைப்பிலும் இதுவரை தாக்குதல்கள் இல்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு முகமை தெரிவித்திருந்தபோதிலும், அதனை செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நிராகரித்துள்ளது.
இது குறித்து, ஐஏஇஏ வெளியிட்டுள்ல பதிவில், நிலப்பரப்புக்கடியில் கட்டமைக்கப்பட்டுள்ள நடான்ஸ் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் நுழைவாயிற்பகுதிக் கட்டடங்கள், தாக்குதல்களில் சேதமடைந்திருப்பதை செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் உறுதிசெய்திருப்பதாகத்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஈரானில் அமைந்துள்ள ‘நடான்ஸ்’ அணு சக்தி வளாகம் அந்நாட்டின் முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் மையமாக விளங்குகிறது. இந்நிலையில், மேற்கண்ட தாக்குதல் நடவடிக்கைகளால் அணுக் கதிர்வீச்சு ஏற்படலாம் என்று அச்சம் எழுந்துள்ள நிலையில், கதிர்வீச்சுத் தாக்கம் இருக்கப்போவதில்லை என்றும் ஐஏஇஏ தெளிவுபடுத்தியுள்ளது.