அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நிலையில், ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்க படைகளும் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாக வளைகுடா நாடுகள் கூறியிருக்கின்றன.
நாட்டின் மிகப்பெரிய ஷாய்பா எண்ணெய் வயலைக் குறி வைத்து ஈரான் ஏவிய நான்கு ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதாக சௌவூதி அரேபியா தெரிவித்துள்ளது, இது ஈரான் ஒரு சில மணி நேரங்களுக்குள் நடத்திய இரண்டாவது தாக்குதல்.
சில இடங்களில் குண்டுகள் விழுந்து வெடிச் சப்தங்கள் கேட்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் ரயில் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர்.
இதற்கிடையே, இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட் மற்றும் தெஹ்ரான் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதனால், ஈரானில் பலியானவர்கள் எண்ணிக்கை 1230 ஆகவும், டெபனானில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆகவும் உயர்ந்துள்ளது.