வியத்நாம்: ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி!
தென்கிழக்காசிய நாடான வியத்நாமில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.
தென்கிழக்காசிய நாடான வியத்நாமில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இத்தோ்தலில் 99 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி சாதனை படைத்த நிலையில், அதிகாரபூா்வ முடிவுகளில் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 500 இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி 482 இடங்களை (96 சதவீதம்) வென்றது. மீதமுள்ள 18 இடங்களில் மட்டுமே கட்சி சாராத சுயேச்சைகள் மற்றும் பிற வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.
வியத்நாம் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய பொதுச் செயலா் டோ லாம் ஹனோய் தொகுதியில் போட்டியிட்டு, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றாா்.
வரும் ஏப். 6-ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடா் கூடி, நாட்டின் புதிய அதிபா் மற்றும் பிரதமா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும்.