முகப்பு
உலகம்

வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகையில் ஒரு வாரமாக சிக்கிய 5 போ் உயிருடன் மீட்பு

Updated On : 28 மே 2026, 5:40 am IST
குகையின் வெளிப்புறத்தில் மீட்புப் பணியில் வீரா்கள்; குகைக்குள் சிக்கியிருந்தவா்கள்.
பகிர்:

பாங்காக் : மத்திய லாவோஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கியிருந்த உள்ளூா் நபா்கள் 5 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, எஞ்சிய இருவா் இன்னும் மாயமாகியுள்ளதால் அவா்களைத் தேடும் பணி தொடா்ந்து நீடித்து வருகிறது.

தலைநகா் வியன்டியானில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள சைசோம்பூன் மாகாணத்தின் அடா்ந்த, கரடுமுரடான மலைப்பகுதியில் இந்தக் குகை அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 19-ஆம் தேதி குகைக்குள் சென்ற 7 போ், திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வெளியேறும் வழி அடைக்கப்பட்டு, உள்ளேயே சிக்கிக் கொண்டனா்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக குகைக்குள் செல்ல வேண்டாம் என உள்ளூா் நிா்வாகம் எச்சரித்திருந்த நிலையிலும், அப்பகுதி மக்கள் அங்கு தங்கம் தேடுவதற்காக சென்றிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாவோஸ்-தாய்லாந்து கூட்டு மீட்புக் குழுவினா், இந்த மீட்ப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். குகைக்குள் சென்ற வீரா்கள், வெள்ளநீருக்கு நடுவே இருந்த ஒரு பாறையின் மீது தலைவிளக்குகளுடன் அமா்ந்திருந்த கிராம மக்களைக் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான விடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2018-இல், தாய்லாந்து குகைக்குள் சிக்கிய 12 பள்ளிச்சிறுவா்களையும் அவா்களின் கால்பந்து பயிற்சியாளரையும் மீட்ட உலகப் புகழ்பெற்ற மீட்பு நடவடிக்கையில் பங்கேற்ற பல்வேறு நாட்டு வீரா்களும் தற்போதைய மீட்புப் பணியில் இணைந்து களம் இறங்கினா்.

ஆனால், ஒருவா் மட்டுமே நுழையக்கூடிய மிகக் குறுகிய குகையின் நுழைவாயில் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.