சீனா: நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 85 பேர் பலி
சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலி
சீனாவி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
சீனாவின் ஷான்சி மாகாணத்தின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் எரிவாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, சுரங்கத்தினுள் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிவிபத்தில் சிக்கி சுமார் 85-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், சுரங்கத்தினுள் இருந்த 200-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
உள்ளூர் செய்தி தகவல்களின்படி, சுரங்கத்தின் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.
summary