டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இன்ஸ்டாகிராமில் ‘ரஞ்சிதமே’ பாடலின் சாதனை! 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. 

News image
Updated On :17 டிசம்பர் 2022, 2:51 pm IST

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளது. 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் வாரிசு படத்தில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - தமன். ஷியாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் பலர் இப்பட்டத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

சமீபத்தில்  'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், விஜய், மானசி இணைந்து பாடிய இப்பாடல் இதுவரை யூடியூப்பில் 9.7கோடிக்கும் அதிகமான (97 மில்லியன்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிம்பு குரலில் வெளியான ‘தீ தளபதி’ பாடல் யூடியூபில் 2.4கோடி (24 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

இந்நிலையில், விஜய்- மானசி குரலில் வெளியான ரஞ்சிதமே பாடல் இன்ஸ்டாகிராமில் 100 ஆயிரம் ரீல்ஸ்களை தாண்டி ரசிகர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் 3வது பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.