சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடர், டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில்,
தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடரின் மீது பலருக்கு அதிருப்தியே நிலவுகிறது என்பதை இந்தப் பின்னடைவு சுட்டிக்காட்டுகிறது.
ஆதி குணசேகரனாக நடித்துவரும் வேல ராமமூர்த்தியின் நடிப்பும் மாரிமுத்து அளவுக்கு ரசிகர்களைக் கவரத் தவறியதே எதிர்நீச்சல் தொடரின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. இந்தத் தொடருக்கு அனைத்துத் தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்த மாரிமுத்து.
அவரின் மறைவுக்குப் பிறகு அப்பாத்திரத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். அவரின் நடிப்பு ஆக்ரோஷமானதாக இருந்தாலும், மாரிமுத்துவிடம் இருந்த நக்கலும் நையாண்டியும் துளியும் இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் மீது ஆர்வமிழந்த ரசிகர்கள், வேல ராமமூர்த்தி அப்பாத்திரத்தில் எப்படி நடிக்கிறார் என்ற ஆர்வமிகுதியைக் கொண்டிருந்தனர். அதனால், வேல ராமமூர்த்தி வந்தபிறகு சில வாரங்களுக்கு முதலிடத்தில் எதிர்நீச்சல் தொடர் இருந்தது.
எனினும் படிப்படியாக தற்போது எதிர்நீச்சல் தனது முதலிடத்தை இழந்து தற்போது டிஆர்பி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த வாரம் 9.55 புள்ளிகளை மட்டுமே எதிர்நீச்சல் தொடர் பெற்றிருந்தது.

வானத்தைப்போல தொடர் டிஆர்பி பட்டியலில் 10.40 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் கயல் 10.14 புள்ளிகள், 3வது இடத்தில் சுந்தரி தொடர் 9.75 புள்ளிகள், 4வது இடத்தில் சிங்கப்பெண்ணே 9.62 புள்ளிகள் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

சால்மன் மீன்கள் சென்னையில் கிடைக்குமா? தமிழ்ப் பெயர் இதுவா?

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



