பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பூஜையுடன் தொடங்கிய நயன்தாராவின் புதிய படம்!

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

Published On :

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள இறைவன் திரைப்படம் வருகிற செப்.28 ஆம் தேதி வெளியாகிறது.

Story image

நயன்தாரா முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 எனப் பெயரிடப்பட்டுள்ளது. கோலமாவு கோகிலா படத்துக்கு பிறகு  நயன்தாராவுடன் யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்.

பிரபல யூடியூப் சேனலில் புகழ்பெற்ற டூட் விக்கி இப்படத்தை எழுதி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

Story image

மண்ணாங்கட்டி படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியாகி, இணையத்தில் வைரலான நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இப்பட பூஜையில் யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.