மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இதையும் படிக்க: இணையத்தை ஆக்கிரமிக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்!
தனி விமானத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் காஷ்மீர் பயணம் செய்யும் விடியோ சமீபத்தில் வைரலானது.
நடிகை த்ரிஷா 13 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து நடிப்பதாலும் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியினாலும் ‘லியோ’ படத்தின் மீது எதிர்பார்ப்புள்ளது.
இதையும் படிக்க: 'இயக்குநர் ராஜமௌலி செய்த தவறு இதுதான்...’- நடிகை கங்கனா ரணாவத்!
சமீபத்தில் த்ரிஷா உடல்நிலை காரணமாக காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து 3 நாளில் திரும்பி வந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை பொய்யென நிரூபிக்கும் வகையில் த்ரிஷா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு லியோ படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவ லிங்கத்திற்கு பால் ஊற்றி சாமி தரிசனம் செய்துள்ள விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விடியோவிற்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பேர் லைக் செய்துள்ளனர்.