பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

சிக்கந்தரால் எஸ்கேவுக்கு சிக்கல்?

சிக்கந்தர் மற்றும் எஸ்கே - 23 படம் குறித்து..

சல்மான் கான், சிவகார்த்திகேயன்.

Published On :

சிக்கந்தர் பட வேலைகளால் சிவகார்த்திகேயன் படத்தின் வேலைகள் தாமதமாகி வருகின்றன.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதிலொன்று சிவகார்த்திகேயனின் 23-வது படம். இந்தப் படத்தில் துப்பாக்கியில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.

இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது. இறுதியாக, இன்னும் இரண்டு வாரங்களில் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதால் இதை முடித்ததும் சிக்கந்தர் படத்திற்கு வருகிறேன் என ஏ. ஆர். முருகதாஸ் சொல்ல நடிகர் சல்மான் கான் மறுத்திவிட்டாராம்.

காரணம், சிக்கந்தர் அடுத்தாண்டு ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளதால் அத்தேதிக்கு முன் படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதில் சல்மான் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் திரைப்படம் அடுத்தாண்டு கோடை வெளியீடாகத்தான் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.