கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டிக்கெட் விற்பனை... ரஜினியை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்!

டிக்கெட் விற்பனையில் சிவகார்த்திகேயன் சாதனை...

நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்.

Published On :

டிக்கெட் முன்பதிவில் நடிகர் ரஜினியை பின்னுக்குத் தள்ளியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று (அக். 31) திரையரங்குகளில் வெளியானது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

இந்த நிலையில், சினிமா டிக்கெட் முன்பதிவில் முன்னணியிலிருக்கும் புக் மை ஷோ (book my show) செயலி வாயிலாக அமரன் திரைப்படத்திற்கு முதல் நாளில் 4.78 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Story image

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களிலேயே முதல் நாளில் அதிக முன்பதிவு சாதனையை செய்த படமாக நடிகர் விஜய்யின் கோட் (5.78 லட்சம் டிக்கெட்கள்) திரைப்படமே உள்ளது. இரண்டாவதாக நடிகர் ரஜினிகாந்த்தின் வேட்டையன் (4.7 லட்சம்) இருந்தது.

தற்போது, சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவில் ரஜினியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.