
96 படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.
96 படத்தைப்போல மனித உறவுகளை அழகாகக் கையாண்ட திரைப்படமாக மெய்யழகன் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.
இதையும் படிக்க: ஜெயிலர் - 2 புரமோ படப்பிடிப்பு பணிகள் துவக்கம்?
இப்படத்தைத் தொடர்ந்து, பிரேம் குமார் அடுத்ததாக இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - த்ரிஷாவை வைத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரேம் குமார் எடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.