தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

96 இரண்டாம் பாகத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன்? இயக்குநர் விளக்கம்!

96 இரண்டாம் பாகம் படத்தின் சர்ச்சை குறித்து இயக்குநர் கூறியதாவது...

News image

96 பட போஸ்டர், பிரதீப் ரங்கநாதன். - கோப்புப் படம்

Updated On :30 மே 2025, 4:59 pm IST

96 இரண்டாம் பாகம் படத்தின் சர்ச்சை குறித்து இயக்குநர் பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

காதலை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டத்தில் இயக்குநர் இருப்பதால் அதில் யார் நடிப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சமீபத்தில் 96 -2 படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து 96 பட இயக்குநர் கூறியதாவது:

இது எப்போதும் போல் பொய்யான செய்திதான். 96 படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் 96-2 எடுக்க முடியும். நடிகர் திரு பிரதீப் ரங்கநாதன் அவர்களை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. இதற்கும் 96 இரண்டாம் பாகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்தப் பொய் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.