உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாலிவுட்டில் சாய் பல்லவி..! ஏக் தின் படத்தின் டீசர் வெளியீடு!

நடிகை சாய் பல்லவியின் ஏக் தின் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது குறித்து...

Published On :

நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் நடிகை சாய் பல்லவி நடிக்கும் “ஏக் தின்” எனும் பாலிவுட் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளின் திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி, நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் உருவாகும் “ஏக் தின்” எனும் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.

இயக்குநர் சுனில் பாண்டே இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கின்றார். மேலும், இப்படத்துக்கு இசையமைப்பாளர் ராம் சம்பத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சாய் பல்லவியின் “ஏக் தின்” திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று (ஜன. 16) வெளியிட்டுள்ளனர். இப்படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

முன்னதாக, பாலிவுட்டில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி “சீதை” கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The teaser for the Bollywood film "Ek Din," produced by actor Aamir Khan and starring actress Sai Pallavi, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.