காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆமிர் கான் தயாரிப்பில் பாலிவுட்டில் களமிறங்கும் சாய் பல்லவி!

நடிகை சாய் பல்லவி நடிக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்து...

Published On :

சாய் பல்லவியின் பாலிவுட் படம்: நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அறிமுகமாகும் “ஏக் தின்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சாய் பல்லவி, நடிகர் ஆமிர் கான் தயாரிப்பில் உருவாகும் “ஏக் தின்” எனும் புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார்.

இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் நடிகர் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கின்றார். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பளர் ராம் சம்பத் இசையமைக்கின்றார்.

இந்த நிலையில், ஏக் தின் திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் இன்று (ஜன. 15) வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை (ஜன. 16) வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இத்துடன், இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் “ராமாயணா” பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்களில் நடிகை சாய் பல்லவி “சீதை” கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The poster for the film "Ek Din," which marks actress Sai Pallavi's Bollywood debut, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.