மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இன்றைய மருத்துவ சிந்தனை அரைக் கீரை

அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால்

News image
Updated On :23 மே 2017, 10:31 am IST

அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை குணமாகும்.

அரைக்கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகுப் பிரச்சனைகள் நீங்கி முடி நன்றாக வளரும்.

அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, அதில் தினமும் ஐந்து சிட்டிகை அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

அரைக்கீரையை சிறு பருப்பு சேர்த்து, தொடரந்து 21 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை மறையும்.

அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து, சாற்றை வடித்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர் காய்ச்சல், ஜன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

அரைக் கீரை தண்டுணன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேராத்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் சளி, இருமல், நுரையீரல் தொடர்பான கப நோய்கள் குணமாகும்.

அரைக் கீரையுடன் பாசிப் பயிறு, மிளகு, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.