எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோடை காலத்தில் உடல் சூடு தணிய இதைச் சாப்பிடலாம்!

கேரட் மனிதர்களுக்கு பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:09 pm IST

கேரட் மனிதர்களுக்கு பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக தற்போதைய கோடை காலத்தில் உடல் சூடு தணிய அதிக அளவில் கேரட் ஜுஸ் பருகலாம். இதன் பிற பயன்களை பார்ப்போம்:

  • கேரட் சாற்றினை வாரம் மூன்று முறை வீதம் இரண்டு மாதங்களுக்கு அருந்தி வந்தால் அல்சர் போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் குணமாவதுடன் மறுபடியும் அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
  • விட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் கண்களில் புரை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்து உள்ளதால் மாலைக்கண் நோய் வராமல் காப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்து புற்றுநோய் ஏற்படாமல் காப்பதில் கேரட் பெரும் பங்கு வகிக்கிறது.
Story image
  • கேரட்டை துருவி பசும்பாலுடன் சேர்த்து காய்ச்சி காய்ந்த திராட்சை மற்றும் தேன் கலந்து அருந்தி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும்.
  • கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவிற்கு பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி, வலி, களைப்பு ஏற்படாது. சோகை நீங்கி பிறக்கும் குழந்தையும் வலுவாக இருக்கும்.
Story image
  • கேரட் சாறுடன் பாதாம் பருப்புகள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன் மஞ்சள் காமாலை நோயை விரைந்து குணமாக்கும். ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துவதால் மூட்டு வீக்கம், வாத நோய்கள் தீரும்.
  • கேரட்டின் மேல் தோலை சீவி துருவி விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், கொத்துமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊற வைத்து மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால் வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இப்படி பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் கேரட்டினை நாமும் தினமும் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்வோம்.
 - நாகை சத்யா பாபு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.