கொலஸ்டிரால் என்பது கொழுப்பில் ஒரு வகை. நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் உறுதித்தன்மையை அளிப்பது இந்த கொலஸ்டிரால்தான்.
நம் உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்தை பெரும்பாலான செல்கள் தாமே உற்பத்தி செய்து கொள்கின்றன. தேவை ஏற்படும் போதெல்லாம் கல்லீரல் கொலஸ்ட்ராலை சற்று அதிகப்படியாக உற்பத்தி செய்து மற்ற பாகங்களுக்கும் அனுப்புகிறது. உடல் இயக்கத்துக்குத் தேவையான பித்தநீர் சுரப்பு, நரம்புகளின் செயல்திறன், ஹார்மோன் உற்பத்தி என பலவற்றை இது காரணியாகிறது.
இந்நிலையில் கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வரும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான புரிதல் என்கிறது புதிய ஆய்வு.
உணவின் மூலமாக கொழுப்பு 10-லிருந்து 15 சதவிகிதம் மட்டும்தான் உடலுக்குக் கிடைக்கிறது. மீதி கொழுப்புச் சத்தை உடல் தானே உற்பத்தி செய்து கொள்கிறது என்பதுதான் உண்மை.உணவின் மூலமாக கொலஸ்டிராலை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிட்டனர் நிபுணர்கள். இந்த ஆய்வில் இதய நோய்க்கும் கொழுப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்தனர் ஆய்வாளர்கள். அந்த ஆய்வினை ஏற்ற அமெரிக்க அரசு, இதயப் பிரச்னைகளுக்கும் கொலஸ்டிராலுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.
உணவு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று உணவைப் பிரித்து பிரித்து எத்தனை பேரால் சாப்பிட முடியும். குப்பை உணவு மற்றும் வாழ்வியல் முறைகளின் பின்விளைவுகளால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆனால் இதயப் பிரச்னைகளுக்கு காரணம் கொலஸ்டிரால் ஒரு கொழுப்பு, எனவே கொழுப்புள்ள உணவை கட்டுப்படுத்தினால் இதய பிரச்னை சரி செய்யலாம் என்பது தவறானது.
உடல் செறிக்கக் கூடிய அளவுக்கு, அளவான உணவை உட்கொள்ளுதல் தான் அடிப்படையானது. தவிர கொலஸ்டிரால் பற்றி கூகுள் செய்து உண்மையான தகவல்களைத் தேடிப் பிடித்து படித்தால் தெளிவு ஏற்படும். எது நல்ல கொலஸ்டிரால், எது கெட்டது என்பது போன்ற சர்ச்சை தேவையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெலிகிராம் மூலம் நீட் போலி வினாத்தாள் விற்பனை! ராஜஸ்தானில் ஒருவர் கைது!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாற்று வெற்றியாக மாறியாக கனடாவின் முதல் வெற்றி!
நீட் மறுதேர்வு: கோவையைத் தொடர்ந்து சேலம் மாணவி தற்கொலை!
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



