தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள்: சுப்ரமணியன் சுவாமியின் சர்ச்சை ட்வீட்! 

தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்    சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2018, 3:55 pm IST

புதுதில்லி: தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்    சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேநேரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கோரி மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள திட்டம் (ஸ்கீம்) எனும் வார்த்தை குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது.  காவிரி மேலாண்மை வாரியமா? அல்லது குழுவா? என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் சனியன்று இரவு போராட்டம் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல்  நிலவி வருகிறது. 

இந்நிலையில் தமிழக மக்களுக்கு காவிரி நீர்தான் வேண்டும் என்றால் அழுது கொண்டே இருங்கள் என்ற பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்    சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக மக்களுக்கு குடிப்பதற்கும் விவசாய தேவைகளுக்கும் நீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இது சமூக ஊடக பயனாளர்களிடையே கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.