கர்னால் (ஹரியாணா): ஹரியாணாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நடிகர் சிவகுமாராக மாறிய சுவையான நிகழ்வு நடந்துள்ளது.
ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அங்குள்ள கர்னால் என்னும் இடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற இளைஞர் ஒருவர் உடனடியாக தனது கையில் இருந்த செல்போன் மூலம் கட்டாருடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
இதனால் ஆவேசமான கட்டார் அந்த இளைஞரின் கையிலிருந்த செல்போனைத் தட்டி விட்டார் இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
அவரது இந்த செய்கையானது நடிகர் சிவகுமார் தமிழகத்தில் பொது இடத்தில் தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்கள் இருவரின் செல்போனைத் தட்டி விட்டதை நினைவுபடுத்தியது.
ஆனால் கட்டாரோ இதற்கு முன்பாகவும் ஊடகங்கள் முன்னிலையில் பொதுமக்களிடமும், தன்னிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடமும் ஆத்திரமாக பேசிய வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


