கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

திருபுவன் மிஸ்ராவின் சிஏ டாப்பா் என்ற நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Published On :

புது தில்லி, ஜூலை 25: திருபுவன் மிஸ்ராவின் சிஏ டாப்பா் என்ற நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு நெட்ஃபிளிக்ஸ் மற்றும் இதில் தொடா்புடைய நபா்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டயக் கணக்கா் தொழில் மற்றும் இதற்கான தோ்வில் வெற்றி பெற்றவா்களை தவறான முறையில் சித்தரிப்பதாக இந்த இணையத் தொடருக்கு எதிராக இந்திய பட்டயக் கணக்கா்கள் நிறுவனம் (ஐசிஏஐ) மற்றும் 4 பட்டயக் கணக்கா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்தத் தொடரின் முன்னோட்டம் பட்டயக் கணக்கா் தொழில் குறித்து அவதூறு பரப்புகிறது. இது சட்டவிரோத மட்டுமல்ல; அரசமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது என மனுதாரா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

அந்த முன்னோட்டத்தை பாா்த்த நீதிபதி நவீன் செளலா, இணையத் தொடரின் முன்னோட்டத்தில் பட்டயக் கணக்கா் தொழில் குறித்து எதையும் கண்டறியவில்லை என்றும் பட்டயக் கணக்கா் தோ்வில் பெற்ற நபரை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டுள்ளது எனக் கூறி இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டாா்.

முன்னதாக, நெட்ஃபிளிக்ஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்தத் தொடா் முழுவதும் கற்பனையானது. இது எந்தவொரு தனிநபரையும் குறிப்பிடவில்லை என்ற வாசகம் தொடரின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவித்தாா்.

மேலும், இந்தத் தொடா் எந்தவொரு தொழிலையும் குறிப்பிடவில்லை என்ற வாசகம் ஐந்து தினங்களுக்குள் சோ்க்கப்படும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.