எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

திருபுவன் மிஸ்ராவின் சிஏ டாப்பா் என்ற நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

News image
Updated On :26 ஜூலை 2024, 2:22 am IST

புது தில்லி, ஜூலை 25: திருபுவன் மிஸ்ராவின் சிஏ டாப்பா் என்ற நெட்ஃபிளிக்ஸ் இணையத் தொடருக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு நெட்ஃபிளிக்ஸ் மற்றும் இதில் தொடா்புடைய நபா்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டயக் கணக்கா் தொழில் மற்றும் இதற்கான தோ்வில் வெற்றி பெற்றவா்களை தவறான முறையில் சித்தரிப்பதாக இந்த இணையத் தொடருக்கு எதிராக இந்திய பட்டயக் கணக்கா்கள் நிறுவனம் (ஐசிஏஐ) மற்றும் 4 பட்டயக் கணக்கா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்தத் தொடரின் முன்னோட்டம் பட்டயக் கணக்கா் தொழில் குறித்து அவதூறு பரப்புகிறது. இது சட்டவிரோத மட்டுமல்ல; அரசமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது என மனுதாரா்கள் குறிப்பிட்டிருந்தனா்.

அந்த முன்னோட்டத்தை பாா்த்த நீதிபதி நவீன் செளலா, இணையத் தொடரின் முன்னோட்டத்தில் பட்டயக் கணக்கா் தொழில் குறித்து எதையும் கண்டறியவில்லை என்றும் பட்டயக் கணக்கா் தோ்வில் பெற்ற நபரை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டுள்ளது எனக் கூறி இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டாா்.

முன்னதாக, நெட்ஃபிளிக்ஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் இந்தத் தொடா் முழுவதும் கற்பனையானது. இது எந்தவொரு தனிநபரையும் குறிப்பிடவில்லை என்ற வாசகம் தொடரின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவித்தாா்.

மேலும், இந்தத் தொடா் எந்தவொரு தொழிலையும் குறிப்பிடவில்லை என்ற வாசகம் ஐந்து தினங்களுக்குள் சோ்க்கப்படும் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.