தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வீட்டின் முன்பாக விளையாடிய சிறுவன் குத்திக் கொலை!

பிகாரில் வீட்டின் முன்பாக விளையாடிய சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

News image

கோப்புப் படம்

Updated On :25 செப்டம்பர் 2024, 12:16 pm

பிகாரில் வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒருவர், தனது வீட்டின் முன்னால் குழந்தைகளை விளையாடுவதை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பாக, செவ்வாய்க்கிழமையில் சாஹில் குமார் என்ற 3 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.

இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அந்த சிறுவனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், சாஹில் குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி, சாஹில் குமார் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சிறுவனைக் கொலை செய்தவரைக் கைது செய்த காவல்துறையினர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுன் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.