கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

வீட்டின் முன்பாக விளையாடிய சிறுவன் குத்திக் கொலை!

பிகாரில் வீட்டின் முன்பாக விளையாடிய சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

News image

கோப்புப் படம்

Updated On :25 செப்டம்பர் 2024, 5:46 pm IST

பிகாரில் வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒருவர், தனது வீட்டின் முன்னால் குழந்தைகளை விளையாடுவதை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பாக, செவ்வாய்க்கிழமையில் சாஹில் குமார் என்ற 3 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.

இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அந்த சிறுவனைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், சாஹில் குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி, சாஹில் குமார் உயிரிழந்தார்.

இந்த நிலையில், சிறுவனைக் கொலை செய்தவரைக் கைது செய்த காவல்துறையினர், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுன் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.