எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

'ஓராண்டு போதும், ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வேண்டும்' - ஒமர் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News image

ஒமர் அப்துல்லா.

Updated On :2 ஜனவரி 2025, 1:31 pm IST

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகம்தான். அதன் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு யூனியன் பிரதேச அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இந்த அரசுடன் தொடர்புடையவர்கள், ஆனால் ஜம்மு-காஷ்மீர் அரசு, முன்பு இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்குக் கடமைப்பட்டுள்ளோம். சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்கிவிட்டோம். மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து பெற வேண்டும்.

மக்களாகிய எங்களுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். அதன்படி ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்து மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றமும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை விரைந்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த ஒரு ஆண்டு போதுமானது என்று நினைக்கிறோம்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.