மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருவதையடுத்து, அந்நாட்டுக்கு உதவும் வகையில் 20,000 டோஸ் தட்டம்மை தடுப்பூசி மருந்து, 3 டன் மருந்து சாதனங்களை இந்தியா அனுப்பியுள்ளது.
மாலத்தீவு நாட்டில் தட்டம்மை வேகமாகப் பரவி வருகிறது. ஏராளமானோா் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து மாலத்தீவுக்கு உதவும் பொருட்டு, தடுப்பூசி மருந்து, மருத்துவ சாதனங்களை இந்தியா அனுப்பி வைத்தது.
இவை அனைத்தும் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் கீலா அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்தியா செய்துள்ள இந்த உதவிக்கு மாலத்தீவு அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், உரிய காலத்தில் செய்த உதவிக்கு நன்றி என்றும், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய நட்புறவை இது பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கேரளத்தில் வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று: வயநாட்டில் மேலும் 7 சிறாா்கள் பாதிப்பு

மருந்து உற்பத்தி முறைகேடுகளைத் தடுக்க 3 கட்ட நடவடிக்கை: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

வங்கதேசத்தில் மோசமடைந்து வரும் தட்டம்மை பரவல்: 601-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!






