கருணாநிதி பிறந்தநாளில் சத்துணவில் இனிப்புப் பொங்கல்: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மட்டும் மகளிர் உரிமைத்துறையில் பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டார். 

அதில் ஒரு அறிவிப்பாக, பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளில் சத்துணவு குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது போன்று இனி வரும் ஆண்டுகளில் கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com