‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு!

‘இந்தியா’கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என்று 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.
‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும்  மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு!

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அந்தக் கூட்டணியின் வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது என்றும் 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் இந்தியா கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் எனவும் வாக்குறுதி அளித்தனர்.

தமிழ்நாடு உள்பட இந்தியாவின் கட்டுப்பாடான ஜனநாயக மதச் சார்பற்ற கூட்டாட்சித் தத்துவம் பாதுகாக்கப்படவும், பாசிச பாஜக ஆட்சியை மத்தியில் இருந்து அகற்றிடவும் 10 ஆண்டு காலம் ஊழல்கள் மூலம் தமிழ்நாட்டைப் படுபாதாளத்திற்குத் தள்ளிய அதிமுக கட்சியைப் புறக்கணித்திடவும் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்தியா கூட்டணி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை பல்வேறு கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் அமைப்புகளும், சங்கங்களும் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன.

அதன்படி, திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தம்முடைய கட்சிகள் சார்பில் ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

‘இந்தியா’ கூட்டணிக்கு 50-க்கும்  மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு!
அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 1

எம்.ஜி.ஆர்.கழகம் ஆதரவு

அருளாளர் இராம.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர்.கழகம், புதிய திராவிடர் கழகம் சார்பில் அதன் நிறுவனத் தலைவரும், தமிழ் நாடு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினருமான ராஜ் கவுண்டர் மற்றும் நிர்வாகிகள்; ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சமூக நீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவர் வடிவேல் ராமன் மற்றும் நிர்வாகிகள், தென்னக அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் பூசாரி நல சங்கத் தலைவர் வாசு மற்றும் மாநில நிர்வாகிகள், தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத் தலைவர் பரிமளம் மற்றும் நிர்வாகிகள், தென்னிந்திய விஸ்வ-கர்மா முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன்; தமிழக வீரசேவை முன்னேற்ற பேரவை, தலைவர் தங்க தமிழ் செல்வன்; தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்கேடி பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ்.ஆர்.எம். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் சமூக நீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றிபெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர். மேலும், பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதிதாக 16 விவசாய சங்கங்கள் ஆதரவு

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில் இந்திய விவசாயிகள் சங்கம் தனபதி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் சங்கரய்யா, சிபா கரும்பு விவசாயிகள் சங்கம் வாரணாசி ராஜேந்திரன், தற்சார்பு விவசாயிகள் சங்கம் பொன்னையா, உழவர் மன்ற கூட்டமைப்பு ஜீவகுமார், மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மணிகண்டன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் சுப்பிரமணியம் உட்பட மொத்தம் 16 அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com