நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியா வழியாக மியான்மரிலிருந்து வங்கதேசத்திற்கு ஆயுதம் கடத்திய 5 பேர் கைது!

மியான்மர் நாட்டிலிருந்து இந்தியா வழியாக வங்கதேசத்திற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டதைப் பற்றி..

News image

கோப்புப் படம்

dinmani online

Updated On :16 ஜனவரி 2025, 10:19 am

DIN

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக ஆயுதம் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடகிழக்கு மாநிலமான மிசோரமின் மாமிட் மாவட்டத்தில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சைத்தாஹ் எனும் கிராமத்தில் நேற்று (ஜன.15) சோதனை மேற்கொண்டனர். மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த கிளர்ச்சிப் படையினருக்கு மத்தியில் இந்தியா வழியாக சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 6 ஏகே-47 ரக துப்பாக்கிகளும், அதன் 10,050 சுற்று தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இந்த கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை மிசோரம் காவல் துறையினர் கைது செய்தனர். அந்த 5 பேரில் ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ’சின் நெஷனல் பிரண்ட்’ எனும் கிளர்ச்சிப் படையின் முக்கியத் தலைவர் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட அவர்கள் 6 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆயுதம் கடத்தும் கும்பலை மொத்தமாக அழிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.