எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!

டென்மார்க் நாட்டில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல் உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Updated On :31 ஜனவரி 2025, 6:23 pm IST

டென்மார்க் நாட்டில் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் உயிரினத்தின் எச்சம் (வாந்தி) படிமங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கோபன்ஹேகனின் தெற்கு பகுதியில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டீவன்ஸ் எனும் இடத்திலுள்ள பாறைகளில், படிமங்கள் சேகரிப்பாளரான பீட்டர் பென்னிக் என்பவர் காய்ந்த சுண்ணாம்பு கலவையின் மத்தியில் கடல் அல்லியின் உதிரிகள் இருப்பதை கவனித்து அதனை சேகரித்து ஆய்விற்காக கிழக்கு ஸீலாந்து அருங்காட்சியகத்திற்கு அனுப்பியுள்ளார்.

அங்கு அதனை ஆய்வு செய்து பார்த்தில் அது சுமார் 6.6 கோடி (66 மில்லியன்) ஆண்டுகளுக்கு முந்தைய க்ரெட்டாஷியஸ் காலத்தில் வாழ்ந்த கடல்வாழ் உயிரினத்தின் வாந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில் அந்த எச்சத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கடல் அல்லி பூக்களின் உதிரிகள் இருப்பதாகவும், அதை அக்காலத்தில் வாழ்ந்த கடல் உயிரினம் ஏதேனும் சாப்பிட்டு, ஜீரணமாகாமல் கக்கியிருக்கக் கூடும் எனக் கணித்துள்ளனர்.

இதுபோன்ற அரிதான படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் மூலம் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் உணவு சங்கிலி குறித்த தகவல்கள் பெற்று அதன் மூலம் ஓர் உயிரினம் எந்த உயிரினத்திற்கு உணவாகியுள்ளது என்பது தெரிய வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எச்சமானது 6.6 கோடி (66 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியிலிருந்த க்ரெட்டாஷியஸ் கடலில் வாழ்ந்த மீன் வகையைச் சேர்ந்த உயிரினத்தாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.