1
குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை தவாவில் மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் சப்பாத்தி மிருதுவாகவும் இருப்பதுடன் பூரி போல உப்பும்.
2
மாவு பிசையும் போது தளரப் பிசைந்து கொண்டாலே சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். போலவே பூரிக்கு மாவை இறுகப் பிசைந்து கொண்டால் அதிகம் எண்ணெய் உறிஞ்சாது.
3
சப்பாத்தி மாவில் நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.
4
சப்பாத்திக்கு திரட்டும் போது மாவை தொட்டு சப்பாத்தி திரட்டுவார்கள். மேலும் எண்ணெய் ஊற்றி திரட்டினால் சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றத் தேவையில்லை.
5
சப்பாத்தியை நன்கு பேப்பர் போல் திரட்டி அதன் மேல் எண்ணெய் உற்றி அதனை நான்காக மூடி மீண்டும் ஒரு முறை திரட்டி எடுத்து தோசைக் கல்லில் போடுங்கள். சப்பாத்தி எப்படி உப்புகிறது என்று தெரியும்.
6
சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள். கருப்பாக காய்ந்து போகும் தன்மை ஏற்படாது.
7
சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிது தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சூடாக்கினால் சப்பாத்தி சாஃப்ட்டாகி விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானது எப்படி?

பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து உடனே முடிவெடுக்க வேண்டிய அவசரமில்லை! - கேரள அரசு!
உலகின் முதல் டிரில்லியனராகும் எலான் மஸ்க்! ரூ. 94.95 லட்சம் கோடியில் என்னவெல்லாம் செய்யலாம்?

போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!” நயினார் நாகேந்திரன் | BJP
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



