இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஐபிஎல்: நோ பால் வழங்காத நடுவர் மீது கவாஸ்கர் விமர்சனம்

நல்லவேளை, தில்லி அணி வெற்றி பெற்றது...

News image
பிராவோ
Updated On :5 அக்டோபர் 2021, 9:35 am

DIN

நடுவர்களின் முடிவு ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடாது என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் நடுவர்களின் சில முடிவுகள் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரில் பிராவோ வீசிய பந்து கைதவறிச் சென்று ஆடுகளத்துக்கு வெளியே, பேட்ஸ்மேன் பகுதியில் இருந்த ஸ்டம்பின் பின்னால் விழுந்தது. இதற்கு நோ பால் தரவேண்டும் என தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கூறினார்கள். ஆனால் கள நடுவர்கள், டிவி நடுவரிடம் விவாதித்து வைட் வழங்கினார்கள். இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் நடுவர்களின் முடிவு பற்றி கவாஸ்கர் கூறியதாவது:

அது நோ பால் தான். டிவி நடுவர்களின் சில முடிவுகள் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விதமாக அமைந்துவிடும். இப்படி நடக்கக்கூடாது. இதுபோன்ற முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடக்கூடாது. நல்லவேளை, தில்லி அணி வெற்றி பெற்றது. நடுவரின் அந்த முடிவு, ஆட்டத்தை மாற்றியிருக்கும் என்றார்.

எனினும் இந்த விஷயத்தில் நடுவர்கள் எடுத்த முடிவு சரியானதாகவே இருந்தது. ஆடுகளத்துக்கு வெளியே பந்து பிட்ச் ஆனால் அது நோ பாலாகக் கருதப்படும். ஆனால், பேட்ஸ்மேன் பகுதியில் உள்ள ஸ்டம்புக்குப் பின்னால் பிட்ச் ஆனால் அது வைட் ஆகவே கருதப்படும். இந்தத் தகவலை ஐபிஎல் இணையத்தளத்தின் விடியோவில் தில்லி வீரர் அஸ்வின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.