கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தது ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 67 ரன்கள் எடுத்தது ருதுராஜ் கெய்க்வாட்டின் நம்பிக்கையை அதிகரிக்கும். ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலேயே இது போன்ற இன்னிங்ஸ்களில் விளையாடுவது இனிவரும் போட்டிகளில் அவரது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். பந்துவீச்சாளர்களை ருதுராஜ் அருமையாக பயன்படுத்தினார் என்றார்.
நேற்றையப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 58 பந்துகளில் 67 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.