தலைமை குறித்து மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்படம்: சிஎஸ்கே/ எக்ஸ்

ஐபிஎல் தொடர் தொடங்கும்முன் கோப்பையுடன் ஒவ்வொரு அணி வீரர்களும் புகைப்படம் எடுப்பது வழக்கம். அதன்படி சிஎஸ்கே சார்பாக தோனி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றுள்ளார். பின்னர் சிஎஸ்கே நிர்வாகம் ருதுராஜை கேப்டனாக நியமித்துள்ளது கூறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டது.

2019 முதல் சென்னை அணியில் விளையாடும் ருதுராஜ் இதுவரை 52 போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விடியோ வெளியிட்டுள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் 2024-இல் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்: பிசிசிஐ அனுமதி!

அதில் ருதுராஜ் கெய்கவாட் கூறியதாவது:

மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைவிடவும் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதை அறிகிறேன். கேப்டன்சி பொறுப்பை ஏற்றிக்கொள்ள தயாரக இரு என கடந்த ஆண்டே எனக்கு தோனி தெரிவித்திருந்தார். ஏனெனில் திடீரெனக் கூறினால் அது எனக்கு வியப்பாக இருக்கக்கூடாது என்பதால் முன்பே தெரிவித்திருந்தார். ஒரு வாரம் முன்பு இதை நேரடியாகக் கூறினார். அதற்கு முன்பு சில பயிற்சி ஆட்டங்களில் என்னை கேப்டனாக நிற்க வைத்தார். எனக்கு உதவியாக தோனி, ஜடேஜா, ரஹானே போன்ற சீனியர்கள் இருக்கிறார்கள். நான் அணியில் எதையும் புதியதாக மாற்ற வேண்டியதில்லை. அவரவர்கள் சுதந்திரமாக விளையாடினாலே போதும்.

தோனி என்னை தலைமைப் பண்பில் நம்பியது மிகப் பெரியது. எனக்கு எந்த கவலையும் இல்லை. மகிழ்ச்சியுடன் விளையாட காத்திருக்கிறேன் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com