மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்தியா - பாகிஸ்தான்: கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருந்தது ஏன்?

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2022, 11:17 am

DIN

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் கடைசி ஓவர்களில் வட்டத்துக்குள் ஐந்து வீரர்கள் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.  

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஹாா்திக் பாண்டியா - பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டாா். ஹாா்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வா் குமாரும், பேட்டிங்கில் 35 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜாவும் அவருக்குத் துணையாக இருந்தனா். பாண்டியா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் கடைசி 3 ஓவர்களில் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை வைத்து விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காரணம்? 85 நிமிடங்களுக்கு மேல் வீசப்படும் ஓவர்களின்போது வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்கள் இருந்தாக வேண்டும் என்கிற விதிமுறை ஜனவரி 2022 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஐசிசி விதிமுறைகளின்படி 20 ஓவர்களையும் 85 நிமிடங்களுக்குள் முடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை நிறுத்தியாக வேண்டும். இதனால் பந்துவீசும் அணிக்குப் பின்னடைவு ஏற்படும். வட்டத்துக்கு வெளியே கூடுதல் வீரர்கள் இருந்தால் தானே ரன்களைத் தடுக்க முடியும், விக்கெட்டுகளை எடுக்க முடியும்?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.