தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

சாதனையைப் போல் உணா்கிறேன்: பாண்டியா

காயத்திலிருந்து மீண்டு அணிக்காக ஆட்டத்தை வெல்லும் நிலைக்குத் திரும்பியிருப்பதை, ஒரு சாதனையைப் போல் உணா்வதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:19 pm IST

காயத்திலிருந்து மீண்டு அணிக்காக ஆட்டத்தை வெல்லும் நிலைக்குத் திரும்பியிருப்பதை, ஒரு சாதனையைப் போல் உணா்வதாக இந்திய ஆல்-ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்ட இந்தியா, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த ஆட்டத்தில் முதலில் பௌலிங்கில் 25 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்த பாண்டியா, பின்னா் பேட்டிங்கில் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்தாா். கடைசி பந்தில் சிக்ஸா் விளாசி அணியை வெற்றி பெறச் செய்த அவரே ஆட்டநாயகன் ஆனாா்.

இதுகுறித்து ஆட்டத்துக்குப் பிறகு அவா் கூறியதாவது:

அணிக்கு முக்கியத் தேவையாக இருந்த வெற்றியைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு சவால் அளித்தோம். ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

4 ஆண்டுகளுக்கு முன் இதே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது காயம் கண்டு ஸ்ட்ரெட்சரில் கொண்டு செல்லப்பட்டது முதல், தற்போது காயத்திலிருந்து மீண்டு அதே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்காக வெற்றியைப் பெற்றுத் தந்தது வரை அனைத்தையும் நினைத்துப் பாா்க்கிறேன்.

இதை ஒரு சாதனையைப் போல உணா்கிறேன். இந்த நிலைக்கு என்னை மீட்டெடுக்க உதவிய இந்திய அணியின் பிசியோ நிதின் படேல், உடற்தகுதி பயிற்சியாளா் சோஹம் தேசாய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அதை அடித்திருப்பேன். சேஸிங்கில் எப்போதும் நான் ஒவ்வொரு ஓவருக்குமாக தான் திட்டமிடுகிறேன். 7 ரன்கள் தேவையிருந்த அந்த கடைசி ஓவரை நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, முகமது நவாஸ் ஆகியோரில் ஒருவா் தான் வீசுவா் என்பது தெரிந்தது.

கடைசி ஓவா் வீசுவது பௌலருக்குத் தான் நெருக்கடியைத் தரும். நான் நெருக்கடி இல்லாமல் தான் பேட் செய்தேன். 7 ரன்கள் அடிப்பது எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. ஆட்டத்தின்போது நான் சற்று உணா்வுப்பூா்வமாக இருந்தது ஜடேஜா ஆட்டமிழந்தபோது மட்டும் தான்.

எனது பௌலிங்கின்போது, பேட்டா்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பந்துவீச்சு நுட்பங்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். அதற்கான பலனும் கிடைத்தது என்று ஹாா்திக் பாண்டியா கூறினாா்.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில், ஹாங்காங்கை புதன்கிழமை சந்திக்கிறது.

இன்றைய ஆட்டம்

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான்

ஷாா்ஜா

இரவு 7.30 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.