புதிய சாதனை படைப்பார்களா ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும்?

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்களில்...
புதிய சாதனை படைப்பார்களா ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும்?

ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த  தொடக்க வீரர்களாக உள்ள ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் இன்று புதிய சாதனையைப் படைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் 2013 முதல் இதுவரை 110 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 4978 ரன்கள் எடுத்துள்ளார்கள். சராசரி - 45.66 ரன்கள். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. கரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்ட ஷிகர் தவன் இன்று விளையாடுவார் என ரோஹித் சர்மா கூறியுள்ளார். இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - தவன் ஜோடி 22 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் எடுத்த 4-வது ஜோடி என்கிற பெருமையை அடைவார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்களில் இந்தியாவின் சச்சினும் கங்குலியும் உள்ளார்கள். இருவரும் 1996 முதல் 2007 வரை 136 ஆட்டங்களில் விளையாடி 6609 ரன்கள் எடுத்துள்ளார்கள். சராசரி - 49.32 ரன்கள். 

தொடக்க வீரர்கள்: ரோஹித் சர்மா - ஷிகர் தவன் ஜோடி

ஆட்டங்கள் - 110
நாட் அவுட் - 1
ரன்கள் - 4978 ரன்கள்
அதிகபட்ச ரன்கள் - 210 ரன்கள்
சராசரி - 45.66 ரன்கள்
சதங்கள் - 17
அரை சதங்கள் - 15

தொடக்க வீரர்கள்: அதிக ரன்கள்

சச்சின் & கங்குலி - 6609 ரன்கள்
கில்கிறிஸ்ட் & ஹேடன் - 5372 ரன்கள்
கிரீனிட்ஜ் & ஹெய்ன்ஸ் - 5150 ரன்கள்
ரோஹித் சர்மா & ஷிகர் தவன் - 4978 ரன்கள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com