ரோஹித் சர்மா ஊக்கமளிக்கிறார்; டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் பேச்சு!

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய சஹில் சௌகான், ரோஹித் சர்மா தனக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சஹில் சௌகான்
சஹில் சௌகான் படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய சஹில் சௌகான், இந்திய அணியின் கேப்டன்ரோஹித் சர்மா தனக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்டோனிய வீரரான சஹில் சௌகான், அண்மையில் டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். அவர் 27 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

சஹில் சௌகான்
சர்வதேச டி20 போட்டிகளில் 27 பந்துகளில் சதம் விளாசி சாதனை!

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு ஊக்கமளிப்பதாக சஹில் சௌகான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரோஹித் சர்மா (கோப்புப்படம்)
ரோஹித் சர்மா (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா விளையாடுவதைப் பார்த்ததிலிருந்தே நான் அவருடைய மிகப் பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். அவர் மிகச் சிறந்த வீரர். அவர் பேட்டிங் செய்யும்போது பதற்றமடைய மாட்டார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவருடைய ஹூக் ஷாட்டுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

சஹில் சௌகான்
உகாண்டா அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிரையன் மசாபா!

சைப்ரஸுக்கு எதிரான போட்டியில் சஹில் சௌகான் 41 பந்துகளில் 144 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com