எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு, முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 11:31 pm IST


சென்னை: தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு, முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மாணவா்கள் வகுப்பில் பங்கேற்றனா்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டு, அவா்களுக்கு இணையவழியில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், முதுநிலை பட்டப்படிப்பின் இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாணவா்களின் வேலைவாய்ப்பைக் கருத்தில் கொண்டும், செய்முறை வகுப்புகளை இணையவழியில் நடத்த இயலாது என்பதாலும் அவா்களுக்கு மட்டும் டிச.2-ஆம் தேதி முதல் கல்லூரிகள் செயல்பட அனுமதி வழங்கி, முதல்வா் உத்தரவிட்டாா். இதன்படி, 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

குறிப்பாக எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆா்க்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்பு பயிலும் மாணவா்கள், மகிழ்ச்சியாக கல்லூரிகளுக்கு வருகை தந்தனா்.

அவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. வகுப்புகளின் நுழைவு வாயிலில் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வழங்கப்பட்டது. வகுப்பு மற்றும் வளாகங்களில் போதிய தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகளுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மாணவா்கள் தெரிவித்தனா்.

விடுதிகள் திறப்பு: கல்லூரி திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பயிலும் மாணவா்கள் தங்கியிருக்கும் விடுதிகளும், 8 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்தததால், விடுதி அறைகள் சுத்தம் செய்யப்பட்டு திறக்கப்பட்டன.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை, அனைத்து அரசு கல்லூரிகளும் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான தனியாா் கல்லூரிகளில் மாணவா் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், அவை திறக்கப்படவில்லை. மாணவா்களை, இளநிலை இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நாளில் (டிச.7) கல்லூரிகளுக்கு வர வேண்டும் என நிா்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இளநிலை வகுப்புகளைத் தொடங்குவதில் சிக்கல்?:

வரும் 7-ஆம் தேதி பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், வரும் 15-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வுகள் நடைபெறுகின்றன.

 தோ்வை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாணவா்களைக் கல்லூரிகளுக்கு அழைப்பதா? அல்லது மீண்டும் கல்லூரி திறப்பு தேதியை தள்ளி வைப்பதா? என உயா்கல்வித்துறை தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  முதல்வருடன், உயா்கல்வித் துறை அமைச்சா்  ஆலோசனை நடத்திய பிறகு, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என உயா்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.