சங்ககிரி: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரான் சுவாமிக்கு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாட்டாம்பாளையத்தில் உள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கண்ணபிரான் சுவாமிக்கு கிருஷ்ணஜெயந்தியையொட்டி சங்ககிரி வட்டார யாதவா சங்கத்தின் சார்பில் புனித நீர் எடுத்து வந்து பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணஜெயந்தியையொட்டி கோயில் வளாகம் முழுவதும் அரிசி மாவினால் குழந்தைகள் கால் பதியப்பட்டு கிருஷ்ணர் குறித்த பக்தி பாடல்களை பக்தர்கள் பாடினர்.
அதனையடுத்து உற்சவ மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தை சப்பாரத்தில் வைத்து சுற்றி வந்தனர். சிறிய குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு நடந்து சென்றனர்.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர். பின்னர் விழாக்குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


